நிலா
குவளையிலும் குளத்திலும் கிணற்றிலும் ஆற்றிலும் பசும்புல் வெளியிலும் விசும்பிலும் வானிலும் எங்கும் எங்கும் அவளைக் கண்டேன். உலகெலாம் பிணைக்கும் கடற்கரையில், கடல்நீரில் அவளைத் தேடினேன் எங்கும் தவழும் அவளை அலைக் கரங்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தன.