Posts

நிலா

  குவளையிலும் குளத்திலும் கிணற்றிலும் ஆற்றிலும் பசும்புல் வெளியிலும் விசும்பிலும் வானிலும் எங்கும் எங்கும் அவளைக் கண்டேன். உலகெலாம் பிணைக்கும் கடற்கரையில், கடல்நீரில் அவளைத் தேடினேன் எங்கும் தவழும் அவளை அலைக் கரங்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தன.

நிலவு

  நிலவே இங்கு எல்லோருக்கும் நீ லவ்வு… அதனால்தானோ தூரத்தில் இருக்கின்றாய்.   நிலவே… உனக்கும் வியாதியா என்ன? நேற்று மங்கலாய் வந்தவள் இன்று வரவே இல்லையே என்ன ஆச்சர்யம்… இந்த மனிதர்களோடு நீயும் சேர்ந்துக் கொண்டாயோ? இவர்களுக்குத்தான் மாலைக்கண்.   நிலவே… உனக்குக் குளிரே இல்லையா? வானப் போர்வைக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கின்றாயே…   நிலவு… எனக்குச் சொந்தக்காரி… அதனால்தான் அவளின் லீலைகளை அவ்வப்போது தெரிவிக்கின்றாள்.   நிலவே உன் அந்தபுரத்தில் சொர்க்கலோகமா வைத்திருக்கிறாய்… எல்லோரும் உன்னையே பாடுகிறார்களே?

பெருமை

  பொறுமை என்னை ஆட்சி செய்கின்றது. அதனால், நான் பெருமைப்படுகின்றேன்.

இந்நாட்டுப் பிரதிநிதிகள்

  நாங்கள்தான் இந்நாட்டுப் பிரதிநிதிகள். எனக்கென்று சொந்தமாய் இருப்பதோ ஒரு வேட்டி. அவள் என் மனைவிக்கென்று சொந்தமாய் இருப்பதும் ஒரு சேலை. நாங்கள் தினமும் வீடு கட்டுகின்றோம். வீட்டிற்கு எனது வேட்டி சுவரெழுப்பும். அவளது சேலை கூரையமைக்கும். இந்த எங்கள் வீட்டில் நுழைவு வாயில் சன்னல் நிலா முற்றம் அத்தனையும் உண்டு. இரவில் நாங்கள் பௌர்ணமிதான் விடிந்தால் எங்கள் வீடு பறிபோகும். நாங்கள்தான் இந்நாட்டுப் பிரதிநிதிகள்.

முகவரி இல்லாதவன்

காதலால் மாண்டவன் கரிநாளில் பிறந்தவன் காமத்தால் வாழ்பவன் சாபத்தால் அழிபவன் வீரத்தில் வாழ்பவன் ஏழையின் சொந்தக்காரன்.   அன்பால் சிக்குண்டவன் அழுகையின் பங்காளி முகவரி இல்லாதவன் முகாரிக்குப் பந்தக்காரன்.

சிலந்திக் கூடு

  அன்பு என்பது சிலந்திக் கூடு அது சிதைபடுவது நிரந்தரத்திற்கல்ல.

மறுதேர்வு

  அரியரில் பட்டம் பெற்றதால் நாங்கள் விடும் பட்டமும் அறைகுறையாய்ப் பறக்கிறது.