நிலவு

 

நிலவே

இங்கு எல்லோருக்கும்

நீ லவ்வு…

அதனால்தானோ

தூரத்தில் இருக்கின்றாய்.

 

நிலவே…

உனக்கும் வியாதியா என்ன?

நேற்று

மங்கலாய் வந்தவள்

இன்று

வரவே இல்லையே

என்ன ஆச்சர்யம்…

இந்த மனிதர்களோடு

நீயும்

சேர்ந்துக் கொண்டாயோ?

இவர்களுக்குத்தான்

மாலைக்கண்.

 

நிலவே…

உனக்குக்

குளிரே இல்லையா?

வானப்

போர்வைக்குள்ளிருந்து

எட்டிப் பார்க்கின்றாயே…

 

நிலவு…

எனக்குச் சொந்தக்காரி…

அதனால்தான் அவளின் லீலைகளை

அவ்வப்போது

தெரிவிக்கின்றாள்.

 

நிலவே

உன்

அந்தபுரத்தில்

சொர்க்கலோகமா வைத்திருக்கிறாய்…

எல்லோரும்

உன்னையே பாடுகிறார்களே?

Comments

Popular posts from this blog

முகவரி இல்லாதவன்

நிலா