அவன் வாழ்க்கை

 

கொக்கரக்கோ கூவையிலே

கோலமிடுவாள் கோமலவள்ளி

 

குக்கூக்கூ கூவையிலே

துயிலெழுவான் கோபாலன்

 

துள்ளியோடும் காளையோடு

பிள்ளையோடு சென்றிடுவான் – கழனிக்குப்

பிள்ளையோடு சென்றிடுவான்.

 

தந்தைக்கு முத்தமிட

நெற்கதிர்கள்

வளைந்து நிற்கும்.

 

அன்போடு அரவணைக்க

இன்முகத்தோடு

நீர் வார்ப்பான்.

 

முத்துப்பனி கொடுமையிலிருந்து

முழுதாக நீங்கிடவே

முதல்வனை நோக்குகிறான் – உழவன்

முதல்வனை நோக்குகிறான்.

 

கட்டுக் கட்டாய் கத்தை கட்டி

கழனியிலே மூட்டை கட்டி

முத்து முத்தாய்ப் பணம் சேர்ப்பான்

மூன்று நாளும் விழா வைப்பான்.

 

பொங்கல் எனும் திருநாளில்

பொங்கி வரும் கடலலையும் – இவன்

பொங்கலிலே மறைந்து நிற்கும்.

 

பின் அவன்,

கொண்டவளின் கழுத்துக்குக்

கொத்து மாலை தங்கத்திலே.

 

மேனி பட்டதாலே

பருத்தி ஆடை

ஜொலி ஜொலிக்கும்

 

இன்பம் எனும் கடலினிலே

அவன் வாழ்க்கைப் படகு செல்லும்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா