நானல்ல

 

படுத்து

சிலரை நினைக்கின்றேன்.

சிரிப்பு

தானே வருகின்றது.

அதையே சிந்திக்கின்றேன்

அழுகை

தானே வருகின்றது.

எழுகின்றேன்

போதிக்கின்றேன்

அவர்களோ

தங்கள் பாதையை

மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.

அதனால்

சிரிக்கின்றேன்.

அவர்கள் அழியப் போகிறார்கள்.

அதற்குக் காரணம்

நானல்ல

அவர்கள்.

Comments

Popular posts from this blog

நிலா

பெருமை