எதற்கு இந்தப் பாதி
வரவை விரும்பாத
வீட்டிற்கு
வாடிக்கை எதற்கு
என்றே
நாடித் துடிப்பை
அடக்கியே
நாடாமல் நிற்கின்றேன்
– நான்
நாட ஒருவர் இல்லையென்றே
நாடிச் சென்றேன்
– இவன்
நாதி அற்றவன்
என்பதாலே
பாதி வரவில் பாதி
உறவு.
பாதி உறவில் நான்
பாவமாய் நின்றேன்
பாதிப்பது நானென்று
பாதையினை மாற்றினேன்.
Comments
Post a Comment