என்நிலை

 

காற்றினுக்கு நான்

          தடை விதித்தது உண்டு – உன்

          நினைவினுக்கு இல்லை.

பாரினில் நான்

          உலவுவது உண்டு – உன்

          நிழலினைத் தொடர்ந்து.

வாழ்க்கையில் நான்

          இன்பம் கண்டதுண்டு – உன்

          தொடர்பால் அன்று.

காதலில் நான்

          நனைந்தது உண்டு – பின்

          மழைக்கும் விலகியதில்லை.

என்மனம்

          பாலை மணலா? இல்லை

          பாவை, உன் மலர்.

மலரினில் தேனை நீ

          எடுத்துவிட்டதாலே

          வெருட்சியாய் உள்ளேன்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா