நான் தானே விளக்கம்

 

இருவிரலில் உனைவைத்து

          எழுதுகின்றேன் – உன்

இருமாப்பு எனைவந்து

          கொல்லுகின்றது.

கனவாலே உனைநினைத்து

          வாடுகின்றேன் – நம்

மணவோலை அச்சிடவே

          துடிக்கின்றேன்.

 

கனவினையே ஒழித்துக்கட்ட

          நீயிருந்தாய் – அந்தக்

கனவினையே நினைவாக்க

          விரும்புகின்றேன்

ஏகாந்தக் குயிலே

          ஏனிந்த தயக்கம்

நாணத்தின் பொருளே

          நான்தானே விளக்கம்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா