காதல் மொட்டு

 


ஆண் :    ஏண்டி பொண்ணு ஏங்குறே

               எந்தன் மனம் உம்மிலே

பெண் :  ஏங்கும் மனம் அறியுதே

               ஏந்தான் இந்த இடைவெளி

ஆண் :    மகரந்தம் என்னிடம் இருக்தே

               மனம் வரலே உன்னிடம் கொடுக்கவே

பெண் :  வண்டு வந்து மொய்க்கலே

               மலராமல் இருக்க முடியலே

ஆண் :    மலர்ந்த நாளிதுவோ

வண்டு வந்து மொய்க்கவோ            

பெண் :  தேனும் இருக்கு மலரும் இருக்கு

               வண்டு தானே நுகரலே

ஆண் :    வண்டு நுகர்ந்து மொய்க்குதே

               அதன் மனது கேட்கிலே

பெண் :  மொய்த்த வண்டு நுகரலே

               வண்டின்மனம் எதனிடமோ?

ஆண் :    உறவு கொள்ள வந்ததே

               உதறித் தள்ளி விட்டதே

பெண் :  நுகரும் ஆசையிருந்தா

நுனியில் அமர்ந்திருப்பதோ?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா