என் அவள்?
கண்ணுக்கு
அழகானாள் காதல் என்ற
சொல்லுக்கு
விருந்தானாள், கலை என்ற
சொல்லுக்குப்
பொருளானாள் – அவள்
கல்வித்
திருமகளின் பெயரானாள்.
கனவிலே
அவள் வந்தால் – தன்
காதல்
மறையாமல் அவள் தடுத்தாள்
கண்ணாடி
முன்நின்றேன் – காதலாள்
முகம்
கண்டேன், என்னை மறந்தேன்.
எப்போது
பார்த்தேனோ அப்போதே
என்மனதில்
இடம் கொடுத்தேன்
என்மனதில்
அவள் உண்டு
அவள்
மனதில் நானுன்டோ?
ஐயகோ,
அவள் மனதில் நானிருந்தால்
இந்நேரம்
தனித்திருப்பேனா? – நான்
இப்பிறவியில்
அவளில்லாமல் இருப்பேனோ?
அவளைநான்
எப்போது காதல் செய்வேனே?
Comments
Post a Comment