உழவன்

 


நீல வண்ணச் சேலை உடுத்தி

பால் வண்ணப் பொட்டிட்டு – அவனின்

கதிரான ஒளி கொண்டே

மேல் வானம் இருக்குது.

 

கரு வண்ண நிறத்தில்

கப்பலைச் செலுத்தியே

கருத்தோடு நிற்குது – எந்தன்

காலின் அருகே.

 

பச்சை வண்ண மேனியில்

பச்சிளம் பயிர்கள்

பாவிகளின் உடலுக்குப்

பசியைப் போக்குதே.

 

விடியற்காலை நேரத்தில்

விடியலைக் காட்டவே

விழிப்போடு நிற்குது – அது

கோழியெனும் பெயராலே.

 

நாட்டின் ஈரம்

மாட்டைக் கொண்டே

வாட்டமாய்ப் பயிர் செய்வோன்

உழவன் என்பவனே.

 

போட்ட விதை

சேர்ந்தே வர

பகலிரவாய்ப் பாடுபட்டு

பகலிலே கனவும் காண்பான்.

 

அவன்,

 

கொத்தடிமை என்பதாலே

கொத்தான பயிருக்குச்

சொந்தமில்லை – அதில் வந்த

சொத்தைக்கே சொந்தமாவான்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா