என் தவிப்பு
கீதா நீயென் கீதாஞ்சலி
சங்கிதா என் கீதா
அஞ்சலி – நீ
தேன்நிலவில் வருவது
கண்டு
தேவன் இவன் காத்து
நின்றேன்.
தேவதை என்பதால்
தேன்நிலவுக்கு
விண்ணுலகை அமைத்திட்டேன்.
பால்நிலா ஒளியினிலே
பாவையுன்னை
பாலகன் கண்டிட்டே
பரிதவித்தேன் – என்
கண்கள் ஒளியிழக்கச்
செய்திட்டாய்
கண்ணிருந்தும்
குருடனாய் அலைகின்றேன்.
தேரில் வரும்
உனைக்கண்டு
தேவனிவன் ஓடி
வந்தேன் – என்
கால்கள் தளர்ச்சி
பெற்றதால்
காலிருந்தும்
நொண்டியானேன்.
உன்னைக் காணத்தான்
தவித்தேன்
தவிப்பில் வந்தது
கண்ணீர் – இன்றது
உப்பலமாக மாறிவிட்டதால்
உப்பிற்குப் பஞ்சமில்லை
– என்
தவிப்பிற்கோ எல்லையில்லை.
Comments
Post a Comment