பழமை
உதயன் ஒருநாள்
மறைந்தால்
உதயமாவது மேற்கா?
கிழக்கா?
காலம் ஒருநாள்
மாறிப் போகும் – என்
கனவுகள் அன்றே
உதயமாகும்.
சோலை விழியில்
நானிருந்தேன் – அந்தச்
சோலைப் பூவோ வாடுவதேன்?
எனக்குத்,
தேசம் தெரிய அவளிருந்தாள்
– இன்றோ
தேசமே யவளாய்
ஆகிவிட்டாள்.
பாசம் பொழியும்
கனிமொழியே – இன்று
பாகாய் யுருகி
ஓடுகின்றாள்.
பருவம் அடைந்த
பின்னாலும்
பழமை நினைத்து
வாடுகின்றாள்.
Comments
Post a Comment