எனக்குக் கிடைத்தாள்

 

நாளையென் துணைவி

          இன்றென் காதலி

நாடியின் துடிப்பவள் – என்

          இல்லத்திற்கு அரசியவள்

நாதத்திற்கு ஓசையவள்

          நானிலத்தின் முதல்மகள்

மாநிலத்தின் தலைமகள்

          தமிழ்காக்கும் உயர்மகள்.

 

நான்போற்றும் கலைமகள்

          என்னிலுயர்ந்த காதலி

நான்பார்க்கும் பெண்ணே

          என்னுள்ளத்தில் குடிகொண்டாள்

என்னிதயக் கோயிலிலே

          தெய்வமாய் வைத்தேன்

என்றைக்கும் இதயத்தில்

          யான்கண்ட வைரமே.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா