சக்தி தாயே…

 சந்தத்திலே பாட்டமைக்க

சந்திப்புகள் பலதேடி

நான், உந்தன்

சன்னதிக்கே வந்தேன்.

 

தேவதையாய் நீ

தேன்நிலவில் வீற்றிருந்தாய்

தேவையாய் வேண்டினேன்

என், தேவைக்கு

வேண்டு கோளோடு நின்றேன்.

 

வேண்டுகோள் உந்தன்

செவிக்கு மட்டும்

செவிமடுத்தேன் நான்

செய்திடுவாய் அம்மே

செல்வத்தாயே, அருள்நீ

வருக எந்தன் மனதருகே

தருக உந்தன் அருளினையே.

Comments

Popular posts from this blog

நிலா

பெருமை