சேர்ந்தால்…


முந்நீரோடு கண்ணீர் சேர்ந்தால்

தண்ணீர் எப்படி இருக்குமோ?

 

புதியவரோடு முதுமை சேர்ந்தால்

நாடெங் கெப்படி செழிக்குமோ?

 

கதிரவனோடு நிலவும் சேர்ந்தால்

இருபொழு தென்று சொல்வோமா?

 

கண்ணோடு கண்ணும் சேர்ந்தால்

கருத்தில் வேறுபாடு இருக்குமா?

 

தென்றலோடு காற்று சேர்ந்தால்

பிரித்து அறிதல் முடியுமா?

 

கசப்பை மறைக்கும் தேனில்

கசப்பைப் பிரித்தல் இயலுமோ?

 

மனமும் கண்ணும் சேர்ந்தாலன்றி

இயற்கையை இரசிக்க இயலுமோ?

 

மனமும் மனமும் சேர்ந்தாலன்றோ

மாண்புமிகு வாழ்க்கை அமையும்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா