காதல் தாகம்

 


பெண் :       அரைச்ச மஞ்சா தீரவில்லே

                    ஒரச்ச அம்மி தேயவில்லே

                    அத்தை மகன் உன்மேலே

                    ஆசை இன்னும் தீரவில்லே

ஆண் :         வச்ச பூ வாடவில்லே

                    வச்ச பொட்டு அழியவில்லே

                    தாலி கட்டி மச்சானுக்குத்

                    தாகம் இன்னும் தணியவில்லே

பெண் :       கொட்டு மேளம் கொட்டித்தானே

                    கொண்டைக்காரியை நீ மணந்த

                    கொஞ்சுவதற்குத் தடையேனோ

                    கெண்டை விரலைத் தொடுவதற்கு

ஆண் :         துட்டு நகை சீரோடு

                    துல்லி வந்த எம்மயிலே

                    கொல்லையாசை உன் மேலே

                    கொஞ்சத்தான் முடியவில்லே.

பெண் :       குறிஞ்சி மலர் பூத்திருக்க

                    குற்றமென்ன மனசினிலே

ஆண் :         சீர் கொண்டு வந்தவளே

                    சிலையாக நிற்பவளே

                    சினுங்குது எம்மனது – நீ

                    சீர் கொண்டு வந்ததாலே?

பெண் :       சச்சரவுப் பேச்சுக்குச்

                    சந்தேகம் இல்லாம

                    எங்கப்ப செய்திட்டான்

ஆண் :         உங்கப்ப செய்திட்டான்

                    எங்கப்ப வாங்கிட்டான்

                    தங்கப்ப மனசுதான்

                    தரிகதிம போடுதிங்கே.

பெண் :       கோலாட்டம் போடுவிய

                    கோமகனே – என்னை

                    கோதையாக அழைத்திடடா

                    எந்தன் மாமன் மகனே.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா