என்னில் பார்…

 

காதல் தேவதை – என்

நாவில் நடக்கிறாள்.

காலம் மாறினால் – அவள்

கவிதை பிறக்குமா?

 

காணும் பொழுதிலே – என்

நெஞ்சம் துடிக்குதே

கானம் பாடினால் – அதில்

ஓலை தட்டுமோ?

 

நாண் விழியிலே – நீ

வீணை மீட்டினாய்

நாத ஓசையை – என்

இதயத்தில் கேளம்மா?

 

நாணும் பொழுதிலே – என்

குருதி பெருகுதே

நாடிப் பாரம்மா – என்

நாடி துடிப்பதை.

 

தெரிந்து போராயோ – இல்லை

மறந்து போராயோ

பாதை மாத்தம்மா – என்

பித்தம் நீக்கம்மா.

 

நான்முகத்தோனே – உன்

தகப்பன் தானம்மா

நாணத்திற்கு – நான்

தலைவன் தானம்மா.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா