பார் போற்றும் பாவலரேறு

அமைதியின் சொரூபமாய்

ஆண்மையின் விளக்காய்

இன்பத்தின் தூணாய்

ஈகையின் வீரனாய்

உவகையின் சொந்தமாய்

ஊடியவர் உறவாய்

எழுத்தெல்லாம் கல்வெட்டாய்

ஏற்றமே தனியாளாய்

ஐந்நிலம் வாசமாய்

ஒன்றினாய் அறவோனாய்

ஓங்கிய தமிழனாய்

ஔதகம் போற்றினாய்

எழுத்தாய்வில் ஊன்றினாய்

எழுதுகோல் நாயகனாய்

கற்கையில் சிறந்தாய்

காப்பதில் முந்தினாய்

சொல்லாய்வில் திளைத்தாய்

தொல்லியம் பேசினாய்

நல்லியல்பு விளைத்தாய்

பாவலரேறு பாவலனாய்

பொருளாய்வில் புத்தனாய்

பழுதில்லா சிற்பியாய்

வழுவில்லா வளவனாய்

பார்போற்ற வாழ்ந்தவரே.


Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா