திருமண நாள் வாழ்த்து

 கண்ணாடி போல் ஒளிரும்

தண்ணீரின் மேனியிலே

தலைவாரிக் கொள்வதற்குத்

தாமரைப்பூ நின்றிரும்.

 

விண்ணில் வரும் மதியைப்போல்

வண்ணமகள்  உனக்காகவே

வாழ்க்கையினைச் செப்பனிட்டு

வழிநடத்தவே நின்றிருப்பாள்.

 

காவியங்கள் நாட்டில் பல

கவிதைகள் அதிலும் பல – உன்

தவிப்புகள் பல அடங்கி

தவப்புதல்வா நீ வாழீ.

என்று,

வாழ்க்கையினை விளக்க வந்த

வாழ்க்கைத் துணைவியையும்

நின்னையும் சேர்த்தே

வாழ்த்துகிறேன் திருமண நாளிலே.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா