தெளிவு

 

வானத்து நிலவுக்கு குளிர்வந்தது – அது

கோடைக் காற்றைத் தேடி நின்றது

கானத்துக் குயிலுக்கு மயக்கம் வந்தது – அந்த

மயக்கம் தானே இசையை மழுப்பியது.

 

சோலைக்குள் மயிலொன்று தோகை விரித்தது – அது

சுகமாய் இலையென்று விடை அளித்தது

தென்றல் தரும்சுவை யொன்றுதான் – அதைக்

கவிஞன் பலவாய் ஆக்கி வைப்பான்

பஞ்சும் நெருப்பும் பாச எல்லை – அதைப்

புரிந்தால் வாழ்வில் நீச்ச மில்லை.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா