காதலுண்டு

 

வெண்ணிலா வானிலே வந்தது – என்

கண்ணிலே ஏனது தெரிந்தது.

என்னிலே ஆசையே வந்தது – என்

பண்ணிலே கருவாயே னானாயோ?

 

தண்ணியில்லா குளத்திலே நீந்தினேன் – என்

நீச்சலைப் பார்க்கநீ வந்தாயோ?

வானத்திலே நீ நடந்து போகின்றாய் – என்

கானத்திலே பொருளாய்நீ நிற்கின்றாய்.

 

நீரிலே உன்முகத்தைப் பார்க்கின்றேன்

நீயில்லை என்றுநான் தவிக்கின்றேன்.

கண்ணிலே சிறைவைத்துக் காக்கின்றேன்

திறந்தவுடன் விண்ணிலே நிற்கின்றேன்.

 

கோலத்தில் உனைவைத்து வரைகின்றேன் – நீ

கோளத்தில் அல்லவோ சுற்றுகின்றாய்

நாயகன் உனைப்பார்த்துப் பாடுகின்றான்

நாயகியோ உனைவெறுத்துப் பார்க்கின்றாள்

 

வானுக்கும் மண்ணுக்கும் தொடர்புண்டு

கடலுக்கும் கண்ணிற்கும் உறவுண்டு

இரவுக்கும் பகலுக்கும் என்ன உண்டு

உனக்கும் எனக்கும் காதலுண்டு.

Comments

Popular posts from this blog

நிலா

பெருமை