காதலுண்டு

 

வெண்ணிலா வானிலே வந்தது – என்

கண்ணிலே ஏனது தெரிந்தது.

என்னிலே ஆசையே வந்தது – என்

பண்ணிலே கருவாயே னானாயோ?

 

தண்ணியில்லா குளத்திலே நீந்தினேன் – என்

நீச்சலைப் பார்க்கநீ வந்தாயோ?

வானத்திலே நீ நடந்து போகின்றாய் – என்

கானத்திலே பொருளாய்நீ நிற்கின்றாய்.

 

நீரிலே உன்முகத்தைப் பார்க்கின்றேன்

நீயில்லை என்றுநான் தவிக்கின்றேன்.

கண்ணிலே சிறைவைத்துக் காக்கின்றேன்

திறந்தவுடன் விண்ணிலே நிற்கின்றேன்.

 

கோலத்தில் உனைவைத்து வரைகின்றேன் – நீ

கோளத்தில் அல்லவோ சுற்றுகின்றாய்

நாயகன் உனைப்பார்த்துப் பாடுகின்றான்

நாயகியோ உனைவெறுத்துப் பார்க்கின்றாள்

 

வானுக்கும் மண்ணுக்கும் தொடர்புண்டு

கடலுக்கும் கண்ணிற்கும் உறவுண்டு

இரவுக்கும் பகலுக்கும் என்ன உண்டு

உனக்கும் எனக்கும் காதலுண்டு.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா