இதயமே… ஒரு கோயிலை எழுப்பி வா…

 


இதயமே

ஒரு கோயிலை

எழுப்பி வா.

 

கீதமே

அதிலுன்னை
பூஜிக்கின்றேன்.

 

துன்பங்களை

போக்க நீ

பறந்து வா

 

நினைவையே

பன்னீராய் – நான்

தெளிக்கின்றேன்

 

காற்றிலே

தென்றலை – நான்

அழைக்கின்றேன்

 

தென்றலை

தழுவிட நான்

துடிக்கின்றேன்.

 

துடிப்பிலே

உன் மூச்சைத்தான் – நான்

பார்க்கின்றேன்

 

மூச்சிலே

என் பேச்சைத்தான் – நான்

தடுக்கின்றேன்.

 

இதழையே

இனிமையாய்

நினைக்கின்றேன்

 

இனிமையை

தனியாய் நீ

அளிக்க வா

 

என் துன்பங்களைப்

 போக்க நீ

பறந்து வா – குயிலே

என் துன்பங்களைப்

போக்க நீ

பறந்து வா.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா