குயிலே நீ பாடு

 உன், காந்த விழிகள் என்னைக்

கவர்வதேன் – நான்

வடமலையான் இல்லையென்பதற்கு

இதுவும் சாட்சியன்றோ?

 

நீயொரு பார்வை பார்த்தபோது

இதயமது நெய்யானது.

ஒரே பார்வை பார்க்கும்போது

உன் கோபக் கனலால் – அது

உருகி கண்ணீராய் ஆனது.

 

அதனாலே,

இதயமே இல்லை – அதற்கு

அபயம் வேண்டியே

அன்பன் நிற்கின்றேன்.

 

நான்விட்ட கண்ணீரால்

கங்கை நதி பிறந்தது – அதனாலே

கடல் மட்டும் உயர்ந்தது

என் நெஞ்சில் நீ மட்டும்?

 

சிவனுக்கு

உடன் பிறந்தவளோ?

நெற்றிக் கண்ணுக்கு உன்

கொவ்வாயை ஒப்பிடுகின்றாயே?

 

மயிலே குயிலே என்று

கூப்பிட முடியலே – உந்தன்

ஆடல் பாடல் கேட்டு

அவைகள் தோற்றுப் போனதால்

அந்தக் களிப்பில் உன்

தொழிலையேன் விட்டுவிட்டாய்.

 

விசிறிகளின் ஆசை

வீணாகட்டும் என்று

வீம்புக்கு ஏன்

விட்டுவிட்டாய்?

 

எனக்காகவாவது

மணக்காத நாதத்தையும்

மணக்க வைக்கும்

குயிலே நீ பாடு.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா