குயிலே நீ பாடு

 உன், காந்த விழிகள் என்னைக்

கவர்வதேன் – நான்

வடமலையான் இல்லையென்பதற்கு

இதுவும் சாட்சியன்றோ?

 

நீயொரு பார்வை பார்த்தபோது

இதயமது நெய்யானது.

ஒரே பார்வை பார்க்கும்போது

உன் கோபக் கனலால் – அது

உருகி கண்ணீராய் ஆனது.

 

அதனாலே,

இதயமே இல்லை – அதற்கு

அபயம் வேண்டியே

அன்பன் நிற்கின்றேன்.

 

நான்விட்ட கண்ணீரால்

கங்கை நதி பிறந்தது – அதனாலே

கடல் மட்டும் உயர்ந்தது

என் நெஞ்சில் நீ மட்டும்?

 

சிவனுக்கு

உடன் பிறந்தவளோ?

நெற்றிக் கண்ணுக்கு உன்

கொவ்வாயை ஒப்பிடுகின்றாயே?

 

மயிலே குயிலே என்று

கூப்பிட முடியலே – உந்தன்

ஆடல் பாடல் கேட்டு

அவைகள் தோற்றுப் போனதால்

அந்தக் களிப்பில் உன்

தொழிலையேன் விட்டுவிட்டாய்.

 

விசிறிகளின் ஆசை

வீணாகட்டும் என்று

வீம்புக்கு ஏன்

விட்டுவிட்டாய்?

 

எனக்காகவாவது

மணக்காத நாதத்தையும்

மணக்க வைக்கும்

குயிலே நீ பாடு.

Comments