நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

 

அந்தரத்தில் இரு மீன்கள்

துடிக்கும் போது – இந்த

ரத்தமேன் உறைந்து போகிறது.

 

முகத்தில் முத்துக்கள்

வளரும் போதுதான் – எனது

சொத்துக்கள் இழக்கின்றேன்.

 

ஆடையை நீ

குறைத்துக் கொண்டதாலே

பருத்திக்குப் பஞ்சம் வந்ததோ?

 

காற்றால் அல்லல்படுமுன்

தாவணிபோல என்னியதமேன்

தூக்கில் தொங்குகிறது.

 

உன்னைப் பார்க்காத ஒரு நாள்

இருந்திட்டதென்றால்

இவ்வுலகமே இருண்டுவிட்ட

நினைப்பு எனக்கு

 

அழகு மயிலுக்கே உன்மீது

மயக்கம் வரும்போது – நான் மட்டும்

விதிவிலக்கா என்ன?

 

கண்ணைப் பார்த்து

தலைவாரிக் கொள்ள

தலைகீழாய் நிற்கின்றேன் – நீ

வளையாமல் நிற்பதேன்.

 

பார்ப்பவர்களை எரித்துவிடும்

பாவை என்பதாலே – பாவம்

இவனையும் எரிப்பதேன்?

 

சம்மதமின்றி அணுகும்

சஞ்சலக்காரன் இல்லை – நான்

தங்கக் கம்பி என்பது

தெரிந்திருந்தால் என்னையும்

மற்றவர்களோடு சேர்த்திடுவாயா?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா