நானொரு பித்தன்

 மல்லாந்து பார்த்தேன்

மல்லிகைப் பூ – அது

மணம் வீசி

கனம் பெருகி

நின்ற தலையிலிருந்து

பூவையவள் எனக்கு

பூவை மாரியாக்கினாள்.

 

அதனாலே நான்

இப்பூவுலகில்

நிலையில்லாத – என்

எண்ணங்களுக்கு

நிலைநிறுத்திச் செல்லவே

அவள் வருவாளென்று

நிலவைப் பார்க்கும்

சூரியனாக நான்

அவளருகில் அமர்ந்திருந்தேன்.

 

அதற்கும், பொருமையில்லை – என்

மனம் வாசத்தையே

வசந்தமாக்க நாடுவதேன்

நான் ஒரு பித்தன் என்பதாலா?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா