மச்சானைப் பாரடி…

 

பெண் :  ஏ.. மாமன் மச்சான்

               உன்னை நானு

               பார்த்து வச்சேன்

               கழுதை போல

               கத்தி யழைச்சேன் – நீ

               சுத்தி வந்து

               அள்ளிப் போயேன்.

ஆண் :    அந்தி சாயும் நேரமடி

               ஆற்றங்கரை யோரமடி

               அக்கம் பக்கம் பாருமடி

               அக்கா மகளே.

பெண் :  காத்தடிச்சா போதும் மச்சா

               காமனோடு பார்க்கும் மச்சா

ஆண் :    காமனல்லடி காமன்

               காதலடி கண்ணே

பெண் :  இரவுக்கு ஒளிகாட்ட

               மாயமாய் நானிருப்பேன்

ஆண் :    மாயத்தின்

                    மந்திரவாதி நானாவேனே.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா