அடங்கிய கீதம்

 

என்னைத் தொட்ட தென்றல் – அவள்

மேனியையும் தொட்டது

நான்விட்ட மூச்சும் – அவள்

தேகத்தைச் சுட்டது

அவளின் மௌனமொழி – எனக்கு

விடை அளித்தது

நாங்கள் குளித்த நீரும் – நித்தம்

கால்வாயில் சந்திக்கின்றன.

ஆனால், நாங்கள் தான் – இன்னும்

சந்திக்கவில்லை.

நான் நடந்த பூமியில்தான்

அவளும் நடந்தாள்

அவள் பார்த்த பின்தான்

நானும் பார்த்தேன்

என் பார்வை விழியிலே

அவள் நடந்தாள்

எங்களின் மௌனங்கள் – அன்று

கீதம் பாடியது – இன்று

பாடிய கீதம் ஓசையின்றிப் போனது.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா