வீம்பானவள்

 


சிரித்து வந்த சிங்காரி – என்

நினைவில் வந்த அகங்காரி – அவள்

ராகத்தின் உச்சியில் அமைந்து – என்

ரணத்திற்கு அவள் மாற்றாவாள்.

 

கொவ்வாய் திறந்து

கோவை வா என்றாள்.

கண்ணாள் எனைப் பார்த்து

மணி யடித்தாள்.

 

பொன்மேனி உனக்கென்று

பொக்கிசமே படைத்தாள்

பொல்லாத காற்று – அதை

அழித்தே செல்லுதே?

 

காற்று சென்ற திசையிலே

காவளாய் நான் நின்றேன்

கனவிலாவது வருவாள்

கன்னி என்னவள் என்றே

 

கனவே வரவில்லை

தூக்கம் இன்மையால் – என்

தூக்கம் பறித்துச் சென்ற

தும்பியே திரும்பி வா.

 

தூரத்தில் நானில்லை

சதுரத்தில் நிற்கின்றேன்

சதுராட்டம் வேண்டாமே

தாங்காது என் மனம்.

 

வீட்டில் பெரும்போர்

வீழ்த்தியே வந்துள்ளேன்.

வீம்பு எதற்கு இன்னும்

தப்பு ஒன்றும் இல்லை

தப்பாமல் வந்திடு – என்

தங்க வண்ண மயிலே.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா