தலைகீழ் தொடக்கம்


பாருக்குள்ளே நல்ல நாடு – அதை

நினைத்தே வந்தது வீடு

வீட்டுக்குள்ளே ஒரு கூடு – அதைக்

கூட்டிவிட்டவரைப் பாரு.

 

வானத்திலே ஒரு நிலவு – அந்த

நிலவுக்குள்ளே ஒரு வீடு

வீட்டுக்குள்ளே இருளு – அதன்

ஒளியினை இங்கே பாரு.

 

கானத்திலே ஒரு சோகம் – அந்தச்

சோகத்திலே ஒரு வீரம்

வீரத்திலே ஒரு சாரம் – அது

போனபின்தான் விவகாரம்.

 

மலரினிலே ஒரு புதுமை – அந்தப்

புதுமையிலே ஒரு இளமை

இளமையிலே ஒரு நிலைமை – அந்த

நிலைமை தானே வறுமை.

 

தென்றலிலே நலினம் – அந்த

நலினத்தில் வந்தது நடனம்

நடனம் நடப்பது இங்கே – அதைப்

பார்ப்பவர்களெல்லாம் அவரே.

 

கனவில் தெரிந்தது சொர்க்கம்

சொர்க்கத்தில் தெரிவது மாடி

மாடியில் வாழ்வதாய் எண்ணி

தன்னில் ஆசைபல எண்ணி

எண்ணி இருந்தாலந்தக் கன்னி

அது, எல்லாம் கனவென்று எண்ணி

எண்ணி எண்ணி ஏங்கி

மண்ணில் இருந்தாள் தன்னில்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா