நீ இயற்றிய நான்


அருகிலே பார்க்கின்றேன்

          உருகியே நிற்கின்றேன்

உண்மையின் நிழலைநான்

          கனவிலே காண்கின்றேன்

மூச்சையே சந்தமாய்

          வைத்துநீ – என்

உணர்வினைப் பாடலாய்

          இயற்றி விட்டாய்.

 

என்னகத்தையே நீ

          மோனையாக்கினாய்

என்புறத்தையே நீ

          எதுகையாக்கினாய்

என்னலறலை நீ

          இசையாக்கினாய்

இதையே நீயொரு

          பாட்டாக்கினாய்.

 

பாட்டிலே யொரு

          பாவமைத்தாய்

பாவிலே எனையொரு

          பொருளாக்கினாய்

நாவிலே எனை

          உருவாக்கினாய் – இன்று

உன் நாவிலே நான்

          உழலுகின்றேனே.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா