என் மௌன நெஞ்சம்
பள்ளிப் பிள்ளை
துள்ளி வந்து
சொல்லும் வார்த்தை
கல்விச் செல்வனவன்
சொல்லில் வல்லான்
சொற்கள் எல்லாம்
– சொல்லும்
பல்லோடு நிற்கும்.
பல்லில் நின்ற
சொற்கள் எல்லாம்
வெளியில் வந்தால்
மனதே தாங்கலே.
ஏன்?
அவன் இதயம்
கீறல் பட்டதால்
– கீற்றைத்
தேடும் சிலரிங்கே
சிறகாய்ப் பறக்கின்றனர்.
அதனால்தான்,
நான்
தவியாய்த் தவிக்கின்றேன்
Comments
Post a Comment