மல்லிகைப் பூ வாசம்

 சோலையில் பூத்த

மல்லிகைக்கு

ரோசாப்பூ

கொண்டைக்கு வேண்டுமாம்.

 

கொண்டை சிறிதானாலும்

உன்னைவிட வாசனை

ஊருக்கே தெரியுமென்று

வீராப்புடன் கேட்டது.

 

உங்கள் தோட்டத்தில்

கொடிமல்லி இருந்தால் – உன்

காதோடு சொல்லிடும்

தன் கொண்டைக்கு

ரோசாப்பூ வேண்டுமென்று.

 

என் மணத்திற்கே

மாநகரம் தஞ்சம்

என் நிறத்திற்கே

பால்மனம் மஞ்சம்

அதற்கே,

வானகரம் கெஞ்சும்

கெஞ்சலிலே

நாமதை செஞ்சோம்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா