மல்லிகைப் பூ வாசம்

 சோலையில் பூத்த

மல்லிகைக்கு

ரோசாப்பூ

கொண்டைக்கு வேண்டுமாம்.

 

கொண்டை சிறிதானாலும்

உன்னைவிட வாசனை

ஊருக்கே தெரியுமென்று

வீராப்புடன் கேட்டது.

 

உங்கள் தோட்டத்தில்

கொடிமல்லி இருந்தால் – உன்

காதோடு சொல்லிடும்

தன் கொண்டைக்கு

ரோசாப்பூ வேண்டுமென்று.

 

என் மணத்திற்கே

மாநகரம் தஞ்சம்

என் நிறத்திற்கே

பால்மனம் மஞ்சம்

அதற்கே,

வானகரம் கெஞ்சும்

கெஞ்சலிலே

நாமதை செஞ்சோம்.

Comments